இன்று அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் பஞ்சமி ! வழிபட வேண்டிய முறை!

 
இன்று அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் பஞ்சமி ! வழிபட வேண்டிய முறை!


ஒவ்வொரு மாதமும் அமாவாசையை அடுத்த ஐந்தாவது தினம் பஞ்சமியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த பஞ்சமி திதியில் வாராஹியை வழிபட எதிரிகளிடம் இருந்து மட்டுமல்ல நம்மை துரத்தும் கொரோனாவிடமிருது நம்மை காத்து அருள்வாள் அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் சந்தித்து வரும் இன்னல்கள், இடர்கள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் வழிபாடே பஞ்சமி வாராஹி வழிபாடு.

இன்று அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் பஞ்சமி ! வழிபட வேண்டிய முறை!


அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் கொண்டாடிய அன்னையின் வாராஹி வழிபாடு நம்மை அனைத்து இன்னல்களில் இருந்தும் காப்பாற்றும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை .சப்த மாதர்கள் எழுவரில் வராஹியே விஷ்ணுவின் அம்சமாக சேனாதிபதியாக திகழ்கிறாள்.

இன்று அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் பஞ்சமி ! வழிபட வேண்டிய முறை!

இந்த நாளில் அதிகாலை எழுந்து, குளித்து நீராடி, வீட்டிலேயே விளக்கேற்றி விரல் மஞ்சள், குங்குமம் வைத்து வேண்டுதல்கள் நிறைவேற சங்கல்பம் செய்து , எளிய ஸ்லோகங்களில் அம்மனை ஆராதிக்கலாம். வழக்கமான பூஜைக்கு பின் பச்சை கற்பூரம் கலந்த பால் அல்லது இயன்ற நைவேத்தியம் வைத்து தொடர்ச்சியாக ஐந்து பஞ்சமிகளில் வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரத்தை அள்ளித் தந்து நம் வாழ்வை இனிமையாகவும், வளமாகவும் ஆக்குவாள் வாராஹி.

From around the web