அதிர்ச்சி! திருப்பதியில் போலி தரிசன டிக்கெட்!
Jul 12, 2021, 09:15 IST
உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வருடம் முழுக்கவே திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க வருகிறார்கள். திருமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்பவர்களுக்கு, திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இது தெரியாமல், டிராவல்ஸ் வாகனங்கள் மூலம் திருப்பதி வரும் பக்தர்களை, விஐபி தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி சில ஆட்டோ மற்றும் ஜீப் ஓட்டுநர்கள் பணமோசடி செய்ததாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் 2 பக்தர்களிடம் 35 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு போலி தரிசன டிக்கெட்டுகளை வழங்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளது
From around the
web