சூப்பர்! தமிழக கோவில் நிலங்கள், ஆவணங்கள் இன்று இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது! அமைச்சர் அறிவிப்பு!

 
சூப்பர்! தமிழக கோவில் நிலங்கள், ஆவணங்கள் இன்று இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது! அமைச்சர் அறிவிப்பு!

சமீபத்தில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அதிரடியாக கொண்டு வந்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

இந்நிலையில் தமிழகத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் இன்று ஜூன் 9ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

சூப்பர்! தமிழக கோவில் நிலங்கள், ஆவணங்கள் இன்று இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது! அமைச்சர் அறிவிப்பு!

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , “ இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் 4,78,272 ஏக்கர் . இவைகளின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவை முழுவதும் “தமிழ்நிலம்” மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என மூன்று இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

அதில் முதல் கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக கண்டறியப்பட்டு அந்நிலங்களின் நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியன பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும் . மொத்தமுள்ள நிலங்களில் 72%
இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் “திருக்கோயில்கள் நிலங்கள்” என்ற தலைப்பை தேர்வு செய்து அதன் பின்னர் பட்டியலிடப்பட்டுள்ள திருக்கோயிலைத் தேர்வு செய்தவுடன் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் திரையில் தோன்றும்.

சூப்பர்! தமிழக கோவில் நிலங்கள், ஆவணங்கள் இன்று இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது! அமைச்சர் அறிவிப்பு!

இவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம் அல்லது பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். திருக்கோயில்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களின் உரிமை ஆவணங்கள் சம்பந்தப்பட்ட திருக்கோயில்களது பெயரிலேயே இருக்கும்
இதுகுறித்து ஏதேனும் கருத்துக்கள், கோரிக்கைகள், புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால் இணையதளத்தின் “கோரிக்கைகளைப் பதிவிடுக” திட்டத்தின் கீழ் பதிவிடலாம் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

From around the web