இன்று, சுபிட்சங்களை அள்ளி வழங்கும் சோமவாரப் பிரதோஷம்…!

 
இன்று, சுபிட்சங்களை அள்ளி வழங்கும் சோமவாரப் பிரதோஷம்…!


திங்கட்கிழமையை சோமவார் என குறிப்பிடுவது வழக்கம். பொதுவாகவே திங்கட்கிழமைகள் எல்லாமே சிவபெருமானை வழிபட உகந்த தினம். இந்த நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு சிவபெருமான் உடனே செவிசாய்க்கிறார் என்கின்றன ஆன்மிக புராணங்கள். அதிலும் திங்கட் கிழமைகளில் வரும் பிரதோஷத் தினத்தில் சிவ வழிபாடு செய்திட வாழ்வின் இன்னல்கள் நீங்கி சுபிட்சங்களை பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

இன்று, சுபிட்சங்களை அள்ளி வழங்கும் சோமவாரப் பிரதோஷம்…!


இன்றைய தினத்தில் சிவபெருமானுடன் நந்தியையும் தரிசித்து வில்வம் , அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இயன்ற அளவு வயிற்றுப் பசியால் வாடுபவர்களுக்கு அன்னமிடலாம்.
பொதுவாக எல்லா பிரதோஷங்களும் தனி சக்தி வாய்ந்தவை என்றாலும், சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமையில் வருகிற பிரதோஷம் கூடுதல் சக்தி வாய்ந்தது. சிவன், நந்தியின் கொம்புகளுக்கிடையில் ஆடுகின்ற ஆனந்த தாண்டவத்தை. முக்கோடி தேவர்களும், முனிவர்களும் கூடி நின்று பக்தி பரவசத்துடன் இந்த பிரதோஷ வேளையில் கண்டுக் களிப்பதாக ஐதிகம்.


பிரதோஷ வேளையான மாலை நேரத்தில் வீட்டில் இருந்த படியே
‘ஓம் நமச்சிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்க இதுவரை முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அதுவாகவே அகன்று விடுவதை அனுபவ பூர்வமாக உணரலாம்.இதனால் உடலும், மனமும் ஆரோக்கியமடைகிறது. நம் குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும். நம்மை எதிரிகளாக நினைப்பவர்கள், அவர்களாகவே நமது பாதையிலிருந்து விலகிச் சென்று விடுவார்கள்.
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

From around the web