நடிகர் , நடிகைகள் அதிர்ச்சி! வெப் தொடர் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா!

 

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர் நடிகைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி படப்பிடிப்புகள் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுனா என்ற வெப் தொடர் படப்பிடிப்பில் பங்கேற்ற 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இந்த தொடரில் இந்தி நடிகர் ஜிம்மி ஷெர்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

லக்னோவில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் 90 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்ற மற்றவர்கள் 4 தனியார் ஓட்டல்களில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ள நடிகர் நடிகைகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.