பிரபல நடிகை மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

 

பழம்பெரும் நடிகை ஜெயந்தி பெங்களூருவில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

கன்னட சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவர் நடிகை ஜெயந்தி. 1960களில் தொடங்கி 1980களின் இறுதி வரையில் கன்னட சினிமாவில் தன் நடிப்பால் கோலோச்சியவர் நடிகை ஜெயந்தி.

கன்னட சினிமா ரசிகர்களால் அன்பாக அபிநய சாரதா என்று அழைக்கப்பட்டவர். சிறந்த நடிப்பிற்காக 6 மாநில விருதுகளைப் பெற்றிருக்கிறார். கன்னட திரையுலகில் நடிகர் ராஜ்குமாருடன் இவர் நடித்த பல படங்கள் ரசிகர்களால் இன்றளவிலும் கொண்டாடப்படும் படங்களாக இருக்கின்றன.

நீர்குமிழி, பாமாவிஜயம், எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஜெயந்தி பெங்களூருவில் காலமானார். தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஜெயந்தி.

பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி நேற்று தனது இல்லத்தில் காலமானார்.