நடிகை யாஷிகா கவலைக்கிடம்! தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

 


கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்தில் படுகாயம் அடைந்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் விடுமுறை தினத்தை கொண்டாட சென்னையில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் நீண்ட பயணம் செய்து கொண்டிருந்தார். தோழிகளுடன் ஜாலியாக சிரித்து பேசி கொண்டே கார் ஓட்டியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நடிகை யாசிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


ஈசிஆர் சாலையில் நள்ளிரவு கார் நிலை தடுமாறி செண்டர் மீடியனில் மோதியது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டியதாக யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிர்சேதம் ஏற்படுத்தும் விதமாக வாகனத்தை இயக்கியதாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் உடன் சென்ற தோழி இறந்த நிலையில், நடிகை யாஷிகா ஆன்ந்த் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.