என் தாய் இறந்து விட்டார்! ‘தாங்க முடியாத வலியை உணர்கிறேன்’ பிரபல நடிகர் உருக்கம்!

 

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். இது குறித்து நடிகர் அக்‌ஷய்குமார், ‘நான் தாங்க முடியாத வலியை உணர்கிறேன்’ என தனது வலியை பகிர்ந்திருக்கிறார்.

பிரபல இந்தி நடிகர் அக்க்ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். தனது தாயாரின் மரணம் குறித்து ட்விட்டரில் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் அக்‌ஷய்குமார், “அவள் என் மையமாக இருந்தாள். தாங்க முடியாத வலியை உணர்கிறேன். என் அம்மா ஸ்ரீமதி அருணா பாட்டியா இன்று காலை அமைதியாக இந்த உலகத்தை விட்டு வெளியேறி, வேறு உலகத்தில் என் அப்பாவுடன் மீண்டும் இணைந்தார். இந்தக் காலப்பகுதியில் நானும் எனது குடும்பத்தினரும் உங்கள் பிரார்த்தனைகளை மதிக்கிறேன். ஓம் சாந்தி, ”என்று அவர் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்தில் தனது அடுத்த படமான சிண்ட்ரெல்லா படத்தின் படப்பிடிப்பில் இருந்த அக்‌ஷய்குமார், கடந்த திங்களன்று, தனது நோய்வாய்ப்பட்ட தாயாருடன் இருப்பதற்காக மும்பை திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.