காரிலேயே மூச்சுத்திணறி பிரபல நடிகை உயிரிழப்பு !!

 

நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே இவர் மராத்தி மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் கொரோனா காரணமாக படப்பிடிப்பு ஏதுமின்றி ஓய்வாக இருந்துள்ளார்.நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே சுப்பம் டெட்ஜ் என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புக்கொண்டதை கொண்டாடும் விதமாக இருவரும் தங்களது சுற்றுலா சென்றனர். சுற்றுலாவிற்கு காரிலேயே கோவா சென்றுள்ளனர். கோவாவின் அர்போரா என்ற பகுதியில் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது.


அவ்வாறு கட்டுப்பாட்டை இழந்ததில் கார் உருண்டு ஓடி சாலையோர பள்ளத்தில் விழுந்தது. தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் காரினுள்ளே மூச்சு திணறி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே மற்றும் அவரது காதலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் இழப்பிற்கு அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பாலிவுட் திரையுலகம் தமது இரங்கல்களை பதிவு செய்து வருகிறது.