பிரபல நகைச்சுவை நடிகர் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

 


தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலையில் ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கனாகாணும் காலங்கள் சீரியல் நடிகர் பாலசரவணனைன் உடன்பிறந்த தங்கையின் 32 வயதேயான கணவர் கடந்த மாதம் கொரோனாவால் உயிரிழந்தார்.


இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், பாலசரவணைன் தந்தை ரங்கநாதன் (60) கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று அவர் உயிரிழந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரங்கநாதன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும், ரங்கநாதனை காப்பாற்ற முடியவில்லை.


குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டுபேர் மரணமடைந்ததால் பாலசரவணனும் அவரது உறவினர்களும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அவருடைய இழப்பிற்கு கோலிவுட் பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.