பால்தாக்கரே வாழ்க்கை வரலாற்றை தயாரித்த பிரபல படத் தயாரிப்பாளர் அதிரடி கைது!

 

பிரபல சினிமா தயாரிப்பாளரான சுவப்னா பட்கர் (39) ராயல் மராத்தா என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் மராத்தியில், ‘பால்காடு’ என்ற படத்தை தயாரித்தார்.

இது, மறைந்த சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாற்று கதை. அதனைத் தொடர்ந்து சுவப்னா பிரபலமானார். இவர் 2016ஆம் ஆண்டு முதல், பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், மனநல பயிற்சியாளராக இருந்து வருகிறார். அதற்கான முனைவர் (பி.எச்.டி). பட்டம் பெற்றிருப்பதாக சான்றிதழ் சமர்பித்திருந்தார்.

கடந்த மாதம் 26ம் தேதி மும்பை பாந்த்ரா போலீசில் சமூக ஆர்வலர் குர்தீப் கவுர்சிங் என்பவர் புகார் அளித்தார். அதில், சுவப்னா பட்கர், போலியாக முனைவர் பட்டம் பெற்று, கவுரவ ஆலோசகராக இருந்து வருகிறார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.