நடிகர் விஜய்க்கு முழு உருவச் சிலை!

 

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த கதாநாயகர்களில் முண்ணனியில் இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் ஏராளம். தமிழகத்தை பொறுத்தவரை நடிகர்கள், நடிகைகளுக்கு சிலை வைப்பது புதிது அல்ல. நமீதா, குஷ்புக்கு கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர் கூட்டம் உண்டு. விஜய்க்கு தமிழகத்தில் சிலை இல்லை என்ற ஆதங்கத்தில் ரசிகர்கள் இருந்தனர்.

இந்தக் குறையை போக்கும் வகையில் தற்போது மங்களூர் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய்க்கு சிலை வைத்து அசத்தியுள்ளனர்.

விஜய் மீது தீவிர பற்று கொண்டுள்ள அவரின் ரசிகர்கள் சென்னை அடுத்த பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் இந்த சிலையை வைத்து அசத்தியுள்ளனர். அந்த சிலையை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் திறந்து வவைத்தார். சிலை திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஆனால் இந்த சிலை திறந்தது நடிகர் விஜய்க்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஏனெனில் அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலையை திறப்பதாக கூறி சசிகலா சாயலில் இருந்த சிலையை திறந்ததாக சர்ச்சை எழுந்தது. அதேபோன்று ரசிகர்களால் தற்போது நிறுவப்பட்டிருப்பது விஜய் சிலை என மனத்தில் நினைத்துக்கொண்டு பார்த்தால் தான் தெரியும் என சிலர் கூறுகின்றனர்.

மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் பீஸ்ட். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் பூஜா ஹெக்டே. சன் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில்,நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.