என் கணவர் அப்பாவி! நடிகை ஷில்பா ஷெட்டி அதிரடி ஸ்டேட்மெண்ட்!

 


பாலிவுட் திரையுலகில் முண்ணனி கதாநாயகிகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மாடல்களை கொண்டு ஆபாச படங்களை தயாரித்து, அதை வெளிநாட்டுக்கு விற்பனை செய்ததாக பிரபல் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை முக்கிய குற்றவாளியாக கூறியுள்ள மும்பை காவல்துறை, தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஆபாச படங்களில் நடிக்க சொல்லி ராஜ்குந்த்ரா தங்களை மிரட்டியதாக 3 பெண்கள் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது.


இந்நிலையில், ஆபாச படதயாரிப்பில் தனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பில்லை என நடிகை ஷில்பா ஷெட்டி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தம்முடைய கணவர் ராஜ் குந்த்ரா அப்பாவி எனவும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் விசாரணையில் நடிகை ஷில்பா ஷெட்டி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.