திருப்பதியில் நயன்தாரா திருமணம்!! உற்சாகத்தில் விக்னேஷ் சிவன்!!

 


ஒரு வழியாக காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலாகும் முடிவுக்கு வந்திருக்கிறார் நயன்.

தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகைகளில் முதலிடத்தில் இருந்து வரும், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி 90ஸ் கிட்ஸ் வயிற்றெரிச்சலைக் கொட்டி வருகின்றன.

இருவரும் சமீபகாலமாக கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இதனையும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தி வருகின்றனர்.சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது எனவும் அதற்கு அடையாளமாக மோதிரத்தையும் காட்டினார்.

அவருடைய ரசிகர்கள் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில் அடுத்த வருடம் திருமணம் நடைபெறும் எனவும், திருப்பதி கோவிலில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகின்றன. திருமணத்துக்கு முன்பு கைவசம் உள்ள படங்களை முடித்து கொடுக்க நயன்தாரா திட்டமிட்டு வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.