அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த் !

 

தமிழ் ரசிகர்களின் இதயத்தில் சூப்பர் ஸ்டாராக இடம் பிடித்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.இவர் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளன. இதனையடுத்து ஐதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்திலிருந்து காரில் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார்.அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்கள் கொல்க்கத்தாவில் நடைபெற உள்ளது.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி என நட்சத்திரப் பட்டாளங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. இந்த படம் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையமைப்பில் வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் எடிட்டிங் செய்ய பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. தீபாவளிக்கு அண்ணாத்த படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.