நாளை மேற்கு வங்கம் செல்லும் ரஜினிகாந்த்!

 

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் அடுத்த படமான அண்ணாத்த படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு விட்டன. அவர் அரசியலுக்கு வருவதாக கூறி வந்த நிலையில் கொரோனா பரவலை காரணம் காட்டி தேர்தல் நேரத்தில் பின்வாங்கினார்.

இதனால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்ற மடைந்தனர். இந்நிலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்திக்க உள்ளதாக செய்தி வெளியானது. அதில் எந்த நிலையிலும் எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று ரஜினிகாந்த் உறுதியாக தெரிவித்து விட்டார். ரஜினி மக்கள் மன்றத்தையே கலைத்து ரஜினி ரசிகர் மன்றம் என்று கூறிவிட்டார். இந்நிலையில் நாளை ரஜினிகாந்த் மேற்கு வங்கம் செல்கிறார்.

அங்கே நான்கு நாட்கள் தங்கி இருந்து அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால் நான்கு நாட்கள் நடித்தால் அதோடு ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிவிடும் .தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருவதால் பட வேலைகள் விரைந்து நடந்து வருகின்றன. அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் என நட்சத்திரப் பட்டாளங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.