சமந்தா நாகசைதன்யா விவாகரத்து! சமந்தா பளீச் விளக்கம்!

 

தமிழ் திரையுலகின் முண்ணனி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர். இவரும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவைவும் காதலித்து திருமணம் செய்து நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தனர் .சமப காலமாக இவரின் வாழ்க்கை அலையாடுகிறது.

சமூக வலைதளங்களில் சமந்தா குறித்த விமர்சனங்களுக்கும், கிசு கிசுக்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.தனது பெயருடன் சேர்த்து வைத்திருந்த நாகசைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்ற பெயரை சமந்தா திடீரென்று நீக்கியதில் உருவான கருத்து வேறுபாடு விவாகரத்து வரை சென்று விட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.இது குறித்து தற்போது சமந்தா முழு விளக்கம் அளித்துள்ளார்.

அதில் இருவரின் கருத்து வேறுபாடு குறித்து ஆயிரக்கணக்கான பதிவுகள் தினமும் வந்துகொண்டே இருக்கிறது.முக்கியமான விஷயம் என்றால் நானே செய்திகளை வெளியிடுவேன். இதுவரை அப்படி தான் இருந்து வந்துள்ளேன்.
சினிமாவை பொறுத்தவரை என்னுடைய நூறு சதவீத உழைப்பை கொடுத்து வருகிறேன். எல்லாம் சிறப்பாக அமைந்தால்தான் ஒரு படம் வெற்றி பெறும். நான் எப்படித்தான் நன்றாக நடித்தாலும், நல்ல இயக்குனரும், கதையும் இல்லாவிட்டால் சினிமா சரியாக ஓடாது. கொரோனா அனைவரது வாழ்க்கையையும் மாற்றிப்போட்டு விட்டது என்னையும் சேர்த்து தான் எனத் தெரிவித்துள்ளார்.