சோகத்தில் திரையுலகம்! பிரபல நடிகர் நெடுமுடி வேணு உயிரிழப்பு!

 

தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனி முத்திரை பதித்தவர் நெடுமுடி வேணு. ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாள மயம்’ ஆகிய படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

நடிகர் நெடுமுடி வேணு இதுவரை கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் இதுவரை 3 தேசிய விருதுகளையும், 6 மாநில விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளார். 73 வயதான நெடுமுடி வேணு சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமானார்.

இந்நிலையில் நேற்று உடல்நலம் சரியில்லாமல் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு ரசிகர்கள் திரைப்பட பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்