நடிகை சமந்தா- நாகசைதன்யா விவாகரத்து காரணம் இது தான்!

 


தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பின் தனித்திறமையால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
சமந்தா 2017ம் ஆண்டு பிரபல நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பொதுவாக தமிழ் நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவர். ஆனால் இதற்கு விதிவிலக்காக சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் சமந்தா சமூக வலைதளங்களில் தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் குடும்ப பெயரை நீக்கிவிட்டார். இதையடுத்து சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்யப் போவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெறுவது என்று முடிவு செய்துவிட்ட நிலையில், இருவருக்கும் இடையேயான பிரச்னையை தீர்த்து வைக்க நாகர்ஜுனா முயற்சி செய்து வருகிறார்.

இருந்த போதிலும் அவரால் இருவருக்கும் ஏற்பட்ட பிணக்கை தீர்க்க முடியவில்லை எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.
நாக சைதன்யா தன் அப்பாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார் எனவும் தற்போது நடிகை சமந்தா தனியாக வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் சேர்ந்து கோவாவில் கடற்கரை அருகே நிலம் வாங்கி உள்ளதாகவும், அங்கு பிரமாண்டமாக பண்ணை வீடு கட்டப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் எது உண்மை என்பதை அவர்கள் இருவரும் சொன்னால் தான் உண்மை நிலை தெரியவரும்.