பழம்பெரும் நடிகர் திலிப் குமார் மருத்துவமனையில் அனுமதி

 

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமாருக்கு(98) முதுமை காரணமாக நேற்று சுவாச பிரச்சினை ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள பி.டி.இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் திலிப் குமார் அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு திலிப் குமாரின் இரு சகோதரர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்ததனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திலீப்குமாருக்கு கடந்த சில நாட்களாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அவரது மனைவி சாய்ரா பானு கூறுகிறார்.