திருமணம் எப்போது? ஸ்ருதிஹாசன் விளக்கம்!

 


தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை சுருதிஹாசன். இவர் சமீபத்தில் டெல்லியை சேர்ந்த சாந்தனு ஹசாரியா என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வைரலானது.இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் சுருதிஹாசன் கலந்துரையாடினார்.

அப்போது ஒரு ரசிகர் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்ற கேள்வி கேட்டார். இது குறித்து சுருதிஹாசன் அளித்த பதிலில் எப்போது திருமணம் என்றால் அது இப்போது எனக்கு தெரியாது. இதுவரை திருமணம் ஆகவில்லை. மேலும் குடும்பத்தினர் உட்பட அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள்.

எனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகள் பேசவும், எழுதவும் , படிக்கவும் தெரியும்.ஏன் நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நான் ஒல்லியாக இல்லை. உடற்பயிற்சி செய்கிறேன். எனக்கு பிடித்த நிறம் கருப்பு, எனது தந்தை நடித்த படங்களில் மிகவும் பிடித்த படம் மகாநதி. அபூர்வ சகோதரர்கள். விருமாண்டி படங்களும் பிடித்தவை. எனது அடுத்த தமிழ் படம் லாபம். அது எப்போது ரிலீசாகும் என்று தெரியவில்லை’’ என்றார்.