முன்னாள் அமைச்சர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

 

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான கருர் மற்றும் சென்னையில் உள்ள வீடு, நிறுவனம் மற்றும் அவரது உறவினர்களின் இல்லம் உள்பட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அதேபோல், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் வீடு, ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.