பரிதாபம்! கேஸ் சிலிண்டர் கசிவால் பயங்கர தீ விபத்து!

 


சென்னையின் நெரிசல் நிறைந்த பகுதிகளில் ஒன்றான திருவெல்லிக்கேணி ஜாம் பஜார் தேவராஜன் தெருவில் வசித்து வருபவர் அப்துல் ரஹீம் . இவர் குடியிருப்பது ஒரு அடுக்குமாடி கட்டிடம். இந்த குடியிருப்பில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பயத்தில் அலறும் சத்தம் கேட்டுள்ளது.அங்கு அப்துல் ரஹீம் (வயது 58), ரஹீமின் மனைவி பாத்திமா (வயது 52), இவர்களின் மகன் நஹீத் (வயது 22) வசித்து வந்ததாக கூறப்பட்டுள்ளது


அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை அதிகாரிகள் தீயை அனைத்து வீட்டில் இருந்த 3 பேரையும் மீட்டனர்.
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அக்கம் பக்கத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் படி தீ விபத்தில் சிக்கியது அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் எனவும், முதற்கட்ட விசாரணையில், கியாஸ் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு மூவரும் தீயில் சிக்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடயவியல் அதிகாரிகள் தொடர்ந்து விபத்து நடந்த வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என தடவியல் நிபுணர்கள் தெரிவித்துளனர்.