திகார் சிறையில் கைதிகளிடையே மோதல்

 

டெல்லி திகார் சிறையில் கைதிகள் சிலர் திடீரென ஆயுதங்களை கொண்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்ட சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

திகார் சிறையில் 3வது பிரிவில் நடந்த மோதல் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோதலில் காயமடைந்த கைதிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளனர்.