செல்போன் பயன்படுத்த தடை- இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

 

அரியலூர் மாவட்டம் நல்லநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இரண்டாமாண்டு படித்து வரும் இவர், எப்போதும் செல்போன் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

வழக்கம் போல கடந்த 10-ம் தேதி வீட்டில் இருந்தபோது செல்போன் பயன்படுத்தியுள்ளார். பொறுத்துப் பார்த்த பெற்றோர்கள் செல்வகுமாரிடம் கண்டிப்பு காட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், விஷம் அருந்தியுள்ளார்.

உடனடியாக அவரை திருச்சி மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதித்தனர். அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த செல்வக்குமார், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து செந்துறை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று பெற்றோர்கள் கண்டிப்பு காட்டுவது இயல்பானது. அதற்காக மாணவர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.