பண்ணை வீட்டில் சரக்கு பார்ட்டி! விடிய விடிய ஆபாச நடனம்! ‘காதலன்’ பட நடிகை மீது வழக்கு பதிவு!

 

தமிழகம் முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அமலில் இருந்தாலும், மது பார்களுக்கு இன்னும் அரசு அனுமதி அளிக்கவில்லை. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பல நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை அருகேயுள்ள பண்ணை வீட்டில், இரவு முழுவதும் சரக்கு பார்ட்டி கொடுத்து, ஆபாச நடனங்களும் நடைப்பெற்றதாக ’காதலன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நடிகை கவிதாஸ்ரீ உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை, கானத்தூரில் சொகுசு பங்களாவுடன் கூடிய பண்ணை ஒன்றை நடிகை கவிதாஸ்ரீ, சினிமா ஷூட்டிங்கிற்கு பயன்படுத்திக் கொள்வதாக கூறி வாடகைக்கு எடுத்திருந்தார். பின்னர், இந்த சொகுசு பங்களாவில், இரவு பார்ட்டிகள் அடிக்கடி நடைப்பெற்று வந்துள்ளதாகவும், அந்த இரவு பார்ட்டிகளுக்கு பல பிரபலங்களையும் இளம்பெண்களையும் வரவழைத்ததாகவும் தெரிகிறது. இந்த இரவு பார்ட்டிகளில் இளம்பெண்கள் ஏலம் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார், ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில், திடீரென பண்ணை வீட்டை சுற்றி வளைத்து, நடிகை கவிதாஸ்ரீ உள்பட 11 பெண்கள் மற்றும் பார்ட்டியில் இருந்த 15 ஆண்களையும் மடக்கிப் பிடித்தனர். சொகுசு பங்காவிற்கும் சீல் வைத்தனர்.

பார்ட்டியில் கலந்து கொள்ள ஆண்களுக்கு ரூ.1599 ரூபாயும், இளம் பெண்களுக்கு இலவசம் என்றும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நடிகை கவிதாஸ்ரீ உள்பட 15 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்