காதலன் மேல் ஆசிட் வீச்சு!! காதலி பரபரப்பு வாக்குமூலம்!!

 

காதலி ஆசிட் வீசியதால் முகம் பாதிக்கப்பட்ட நபர், பார்வை இழந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் ஃபேஸ்புக் மூலம் திருவனபுரந்தைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஷீபா இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதை தொடர்ந்து ஷீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் விபரம் அருண்குமாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஷீபாவுடனான தொடர்பை அருண்குமார் துண்டித்துக் கொண்டார்.

இதையடுத்து அருண்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்கவிருந்தது. இதை அறிந்துகொண்ட ஷீபா, பிரச்னையை பேசி தீர்த்துவிடலாம் என்று கூறி அருண்குமாரை இடுக்கிக்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த அருண்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஷீபா கையில் இருந்த ஆசிட்டை அவருடைய முகத்தில் வீசினார். இதனால் நிலைகுலைந்து விழுந்தார் அருண்குமார்.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆசிட் வீச்சால் அருண்குமாருக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோயுள்ளது. அருண்குமாரிடம் இருந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார், ஷீபாவை கணவர் வீட்டிலிருந்து கைது செய்தனர். காதலி காதலன் மேல் ஆசிட் ஊற்றிய சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது.