மருமகனை சுத்தியலால் அடித்துக் கொன்ற மாமியார்..!

 

மும்பை வடலா பகுதியைச் சேர்ந்த சாந்தி பால் (70) மகளுடன் கடந்த 30 வருடங்களுக்கு முன் பஞ்சாபில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கு வந்த போது மூதாட்டிக்கு உதவியாக இருந்தவர் பிமால் கன்னா.

பின்நாளில் மூதாட்டியின் மகளை காதலிப்பதாக பிமால் கன்னா கூறவே, இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். தம்பதிகளும் மூதாட்டியை தங்களுடனே வைத்துக் கொண்டார். சமீபமாக பிமால் கன்னா போக்கில் மாற்றம் தெரிந்தது.

அவர் தினமும் மனைவியை அடிப்பதும், திட்டுவதும், கொடுமைப்படுத்துவதுமாக இருந்துள்ளார். ஒரு கடத்தில் இதை பொறுக்க முடியாமல் சாந்தி பால் கடந்த 16-ம் தேதி மருகமனுடன் வலுகட்டாயமாக சண்டைக்கு சென்றுள்ளார்.

அப்போது இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த சுத்தியலை வைத்து பிமால் கன்னாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார் மூதாட்டி. இதனால் பிமால் கன்னா சுயநினைவின்றி சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார்.

உடனடியாக அவரை சாந்தி பால் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து மூதாட்டி சாந்தி பால் கைது செய்யப்பட்டார்.