கோர விபத்தில் சிக்கிய விமானம்! 16 பேர் பலி!

 


மத்திய ரஷியாவில் மெண்செலின்ஸ்க் நகரில் ரை ஒட்டிய பகுதியில் விமானத்தில் வீரர்கள் சாகசம் செய்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அது ஒரு 2 இன்ஜின் கொண்ட எல்-410 ரக விமானம். சிறிய தூர போக்குவரத்துக்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த விமானத்தில் மொத்தம் 23 பேர் பயணம் செய்தனர்.


இந்த விமானம் திடீரென விபத்துள்ளானது. 1987 முதல் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த விமானம் இரண்டாக உடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த விபத்தில் 16 பயணிகள் மரணம் அடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை ரஷிய செய்தி நிறுவனமான டாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


ரஷியாவில் இதுபோன்ற விமான விபத்துகள் சமீபமாக அடிக்கடி நடந்து வருகிறது. இதே போல் சென்ற மாதம் கிழக்கு ரஷியாவில் நடந்த ஒரு விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஜூலை மாதம் ஏற்பட்ட விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை.