ரிக்‌ஷா தொழிலாளிக்கு ரூ.3 கோடி வருமான வரி நோட்டீஸ்! பரபரப்பு தகவல்கள்!

 

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் வசித்து வருபவர் பிரதாப் சிங. இவர் பகல்பூர் பகுதியில் அமர் காலனியில் ரிக்‌ஷா ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் தான் ஒரு மோசடியாளர் எனக் கூறி, வருமான வரித்துறை அனுப்பியிருக்கும் நோட்டீசையும் காண்பித்துள்ளார்.

இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் கூட அவருடைய புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


வங்கியிலிருந்து பான் அட்டையுடன் இணைக்க சொன்னதால் மார்ச் மாதம் பான் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி அவருக்கு வருமான வரித்துறையிடமிருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் உடனடியாக வரி பாக்கியான ரூ.3,47,54,896 ஐ செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.


விசாரணையில் இவரது பான் அட்டையைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் ஜிஎஸ்டி எண் பெற்று வியாபாரம் செய்து வருவதாகவும், அதன் மூலம் ரூ.43,44,36,201 வணிகம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸ் நிலையத்துக்கு வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.