தேச துரோக வழக்கு… வெளிநாடு செல்ல நீதிமன்றத்தில் நடிகை கங்கனா மனு!

 

நடிகை கங்கனா ரணாவத் மீது தேச துரோக வழக்கு நிலுவையில் இருப்பதால், படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் பிரிவினையை தூண்டுகிற மாதிரி கருத்துக்களை பதிவிட்டார் என நடிகை கங்கனா மீதும், அவரது சகோதரி ரங்கோலி மீதும் மும்பை பாந்த்ரா போலீசார் தேச துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்த நடிகை கங்கனாவிற்கு, பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து, தேச துரோக வழக்கு நிலுவையில் இருப்பதால் பாஸ்போர்ட் புதுப்பிக்க முடியாது என்று தகவல் வந்திருக்கிறது. இதையடுத்து அதனை புதுப்பிக்க நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள கங்கேரி நாட்டிற்கு செல்ல வேண்டியிருப்பதால் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி கங்கனா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.