காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

 

சென்னை பெருங்களத்தூரில் வசித்து வருபவர் முருகேசன். கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் அவர், மனைவியின் 5 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து வங்கியில் இருந்து ரூ. 1.10 லட்சம் பணம் பெற்றுள்ளார்.

அதை எடுத்துக் கொண்டு காரில் வீட்டுக்கு திரும்பிய போது, பின்னே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் முருகேசன் காரை முந்திச் சென்று நிறுத்தி சாலையில் பணம் கிடப்பதாக கூறியுள்ளனர்.

அதை நம்பிய முருகேசன் காரில் இருந்து இறங்கி பார்த்துள்ளார். அப்போது மற்றொரு நபர் கார் கதவை திறந்து பணம் மற்றும் அதனுடன் இருந்த 4 கிராம் தங்க நகையை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகேசன் சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகாரளித்தார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொள்ளை நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.