சிவசங்கர் பாபாவிற்கு ஜாமீன்! சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

 


சென்னையில் பிரபல பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா.இவர் மீது அப்பள்ளியின் மாணவிகள் பாலியல் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் உடனடியாக பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், பாலியல் வழக்கில் சிவசங்கர் பாபாவிற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மொத்தம் இவர் மேல் 2 பாலியல் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் 2 வது வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மற்றொரு வழக்கிலும் ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளதால் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சமூக ஆர்வலர்களும், அமைப்புக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.