இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படாது!

 


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.