3 நாட்கள் இலவசம்! ஈஷா யோக மையம் அழைப்பு !

 


தமிழகத்தில் தீபாவளி திருநாள் நவம்பர் 4ம் தேதி அனுசரிக்கப் படுகிறது. இதனை முன்னிட்டு கோவை ஈஷா சார்பில் ‘உயிர் நோக்கம்’ என்ற யோகா வகுப்பு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புக்கள் நவம்பர் 12 முதல் நவம்பர் 14 வரை தமிழக மக்களுக்கு இலவசமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை, மதியம் 11 மணி முதல் 1 மணி வரை, மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை என 3 வேளைகளில் இவ்வகுப்பு தினமும் 2 மணி நேரம் நடைபெற உள்ளது. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இதில் ஏதேனும் ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

இதில் கற்றுக்கொடுக்கப்படும் யோகா பயிற்சிகளை தினமும் செய்து வருவதால் முதுகுத்தண்டு வலுப்பெறும். மேலும் மன அழுத்தம், மூட்டு வலியிலிருந்து விடுதலை பெறலாம். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.


இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் isha.co/uno-pb என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.அல்லது 7383673836 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். நவம்பர் 5ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் என ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.