பரபரப்பு! பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

 

தமிழகத்தில் அரசு தொலைத்தொடர்பு சேவையான பி.எஸ்.என்.எல்.லில் ஊழியர்கள் குறைப்பு சென்ற ஆண்டில் நடைபெற்றது. இதனால் பி.எஸ்.என்.எல். அலுவலங்களில் குறைவான ஊழியர்கள் பணி புரிந்து வருவதாலும், புதிய ஊழியர்கள் நியமிக்கப்படாததால் அவர்களால் வழக்கமான முடிக்க முடியவில்லை.

இதன் அடிப்படையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கையில் ஜூன் மாத ஊதியத்தை வழங்கவும், இனிமேல் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி நாளன்று ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பி.எஸ்.என்.எல். சேவையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட உதவி தலைவர், மாவட்ட அமைப்பு செயலாளர், கிளை செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் கொண்ட பாதகைகள் அணிந்து கோஷம் எழுப்பியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.