சலூன் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

 


பொள்ளாச்சியில் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சபரிவேல் .இவருக்கு வயது 21. இவர் வால்பாறை ரோடு ஆழியாறில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
தமிழகம் முழுவதுமே கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு காரணமாக கடையை திறக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து ஆழியாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் . உடனடியாக காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. அதற்குள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கடையில் பிடித்த தீ அணைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் டி.வி., ஹோம் தியேட்டர், கண்ணாடி, டேபிள் உட்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. யாரோ மர்ம நபர்கள் மண்ணெண்யை ஊற்றி சலூன் கடைக்கு தீ வைத்தது அம்பலமாகியுள்ளது