உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி அறிவிப்பு!

 


தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நிறைவு நாளான இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார் எனவும் தெரிவித்தார்.

அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனைச் செல்வனும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.