நிலை தடுமாறிய ஸ்கூட்டர்! அரசுப்பேருந்து கண்டக்டர் உயிரிழப்பு!

 


கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள வேலப்பநாயக்கன் பாளையத்தில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மகன் ரத்தினசாமி. இவருக்கு வயது 45. இவர் கோவையில் அரசு பேருந்து கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவர் தனது இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்கு சென்று கொண்டு வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.இதில் கண்டக்டர் ரத்தினசாமி பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன்த ரத்தினசாமி மற்றும் அவரது மனைவியை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் ரத்தினசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த அவரது மனைவி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சுல்தான்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்