பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த நர்ஸ்!! நடந்தது என்ன?!! போலீஸ் விசாரணை!!

 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் தேனி ஆண்டிப்பட்டி மாவட்டத்தில் வசிக்கும் மனைவி செல்வியிடம் பேசுவதற்காக நேற்று தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால் அவர் போன் எடுக்காததால் அருகே வசிக்கும் உறவினரை அழைத்து செல்விக்கு சென்று பார்க்க சொல்லியுள்ளார் சுரேஷ்.

அவரும் செல்வி வீட்டுக்கு சென்று பார்த்த போது கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் தட்டிப் பார்த்துவிட்டு, ஆட்கள் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளார். வீட்டுக்குள் இருக்கும் பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் செல்வி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

உடனடியாக போலீசாருக்கும், செல்வியின் கணவர் சுரேஷுக்கும் அந்த நபர் தகவலளித்தார். மகன், மகளுடன் தேனிக்கு வந்தார் கணவர் சுரேஷ்.

செல்வியின் உடலைக் கைப்பற்றிய போலீஸ், அவர் செவிலியாக பணியாற்றி வந்த தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.