தேர்வு எழுதாமல் சான்றிதழ் வழங்கக் கூடாது!

 

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.அந்த வகையில் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் அரியர் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது