இன்று இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியீடு..!

 


தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 17 முதல் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. அண்ணாப் பல்கலைக் கழகக் கல்லூரிகளில் இந்த கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.


இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ல் வரை பெறப்பட்டுள்ளன. இதற்கான கட்டணக் கால அவகாசம் ஆகஸ்ட 27ல் முடிவு பெற்றது. இவர்கள் அனைவரும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர்.


இந்நிலையில், மதிப்பெண்கள் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி தரவரிசை பட்டியல் இன்று செப்டம்பர் 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஜாதி வாரியான மற்றும் சிறப்பு தகுதி ஒதுக்கீடுகள் அடிப்படையில் கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்பட இருக்கின்றன. மேலும் இதில் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டிய நாள் , நேரம், கல்லூரி குறித்த அனைத்து தகவல்களும் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களுக்கு , www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.