ரஜினி ரசிகர்கள் வெறித்தனம்! கட் அவுட்டிற்கு ரத்தத்தால் அபிஷேகம்!

 

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இவர் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதுமே வெறி கொண்ட ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் அண்ணாத்த படத்திற்கு பிரம்மாண்ட கட் அவுட் வைத்து கோலாகலமாக கொண்டாடினர். அத்துடன் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து அவரது ரசிகர்கள் ரத்தத்தால் அபிஷேகம் செய்துள்ளனர்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கட்அவுட்களுக்கு பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் செய்து வந்தனர். தற்போது ரத்த அபிஷேகம் செய்கிற அளவில் வெறித்தனம் அடைந்துள்ளனர். இதனை பல்வேறு சமூக ஆர்வலர்களும், சங்கங்களும், பல்வேறு அமைப்புக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


மேலும் ஆட்டை பலி கொடுத்து ரத்த அபிஷேகம் செய்த குறிப்பிட்ட ரசிகர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


இதனை நேரிலும், பதிவு தபால் மூலமும் பலமுறை கோரிக்கை முன் வைத்தும் தனது ரசிகர்களை இதுவரை நடிகர் ரஜினிகாந்த் தவறிவிட்டார். இனியாவது அவர் விழித்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் தவறான கலாச்சாரம் அரங்கேற அவர் காரணமாக இருந்துவிடக் கூடாது எனவும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.