உள்வாங்கிய கடல்.!! அச்சத்தில் உறைந்த மக்கள்!!

 


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த மழை மேலும் 2 நாட்கள் நீடிக்கும் எனவும், கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் கன்னியாகுமரியிலும் கனமழை பெய்து வருகிறது. ஆனால் கடல் நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கடல் நீர் தாழ்ந்து உள்வாங்கியுள்ளது.

முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிகின்றன.தமிழகம் முழுவதும் தொடர் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், குமரியில் கடல்நீர் உள்வாங்கியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது