நவம்பர் 1ம் தேதி விடுமுறை! கலெக்டர் அதிரடி!

 


தமிழகத்தில் உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள், நிகழ்வுகளின் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
நவம்பர் 1ம் தேதி தமிழ்நாட்டுடன் குமரி இணைந்த தினம். இதனை முன்னிட்டு நவம்பர் 1 திங்கட்கிழமை குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 13ம் தேதி குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் குமரி மாவட்ட தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் ஆகியவை அரசின் அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.