உஷார்!! பார்ட் டைம் வேலை விளம்பரம்! இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்!!

 

உலகம் முழுவதுமே கொரோனா புரட்டி போட்டிருக்கிறது. பலரும் வருமானமின்றி தவித்து வரும் இந்நிலையில், இளம்பெண்களை குறிவைத்து, பண ஆசைக்காட்டி, அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மதுரை வடக்குமாசி வீதியை சேர்ந்த பாண்டியராஜா என்பவரிடம் வாடிக்கையாளர் போல் பேசினார்கள்.

தன்னிடம் பேசுவது போலீசார் என்று தெரியாமல் சிக்கிய பாண்டியராஜா, குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அவர்களிடம் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், பாண்டியராஜா, அவருக்கு உடந்தையாக இருந்த சத்துணவு அமைப்பாளர் குணசேகரன் மற்றும் இரண்டு பெண்களை கைது செய்தனர். இந்த விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்ட் டைம் வேலை தருவதாக கூறி இளம் பெண்களை இதில் சிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது