இன்று மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு!

 


தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.சென்னையில் மெட்ரோ ரயில்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை 2 வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தளர்வுகள் காரணமாக மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை விடுமுறை நாட்களோடு சனி, ஞாயிறும் சேர்ந்து வருகிறது. வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப் பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று ஒரு நாள் மட்டும் நள்ளிரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றன.கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இன்று இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 15 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.