நாளை தமிழகத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

 

தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து தமிழகத்திலிருந்து விடுவிக்கப்பட்டார் . தமிழகத்தில் இருந்து தமது பொறுப்புக்களை முடித்து கொண்டு செப்டம்பர் 15 காலை கிளம்பினார். தற்போது தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தலைநகர் டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை வந்துள்ளார். இவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு கொடுத்தார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு மற்றும் வெ.இறையன்பு, சைலேந்திர பாபு, சங்கர் ஜிவால் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஆர்.என். ரவி செப்டம்பர் 18 நாளை தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்க இருக்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.