உஷார்!! டிசம்பர் 14 வரை இந்த ரயில் ரத்து!! பயணத்தை சரியா திட்டமிட்டுக்கோங்க!!

 

கனமழை காரணமாக டிசம்பர் 14-ஆம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் பாதைகளில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் 22 ஆம் தேதி கல்லாறு – ஆர்டர்லி ரயில் நிலையங்களுக்கு இடையேயுள்ள ரயில் பாதையில், தண்டவாளத்தின் மேல் பாறைகள் விழுந்தன. இதனையடுத்து மேலும் சில இடங்களில் மண் சரிவுகள் ஏற்படவே, ரயில்வே நிர்வாகம் டிசம்பர் 7 ஆம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்தை ரத்து செய்திருந்தது. இந்நிலையில், கனமழை நீடிப்பதன் காரணமாகவும், ஆங்காங்கே மீண்டும் மண் சரிவுகள் ஏற்படுவதாலும் டிசம்பர் 14 ஆம் தேதி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.