போக்சோ கைதி தற்கொலை.!! வழக்கில் திடீர் திருப்பம்!!

 

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் (55). தன்னுடைய வீட்டுக்கு அருகில் வசிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. முதியவர் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது பிணையில் வெளியே வந்திருந்தார் வெள்ளைய்யன். வழக்கு தொடங்கியதில் இருந்தே வெள்ளைய்யனுக்கு தண்டிக்கப்பட்டுவிடுவோமோ என்கிற அச்சம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தனக்கு தீர்ப்பு சாதகமாக வராது என்று கருதிய அவர், நேற்று வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக தளவாய் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.